என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவர் தூக்கு போட்டு தற்கொலை
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மாத் தாயி தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 47). இவ–ருக்கும் இவரது மனைவி அன்னக்கிளி என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அன்னக்கிளி அவரது தாய் வீடான கழுமங்கலத்தில் வசித்து வருகிறார்.இந்தநிலையில் குருநாதன் கழுமங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவி அன்னகிளியை பல முறை குடும்பம் நடத்த வீட்டிற்கு அழைத்தும் வரவில்லை. இதனால் மனமுடைந்த குருநாதன் அப்பாதுரை என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ராஜா உடையார்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பின் னர் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், குருநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங் கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






