search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் மனிதச் சங்கிலி
    X

    அரியலூர் மாவட்டத்தில் மனிதச் சங்கிலி

    • அரியலூர் மாவட்டத்தில் மனிதச் சங்கிலி நடந்தது
    • சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி

    அரியலூர்:

    சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அரியலூர், செந்துறை, திருமானூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

    அரியலூரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்துக்கு விசிக ஒன்றியச் செயலாளர்கள் தங்கராசு,உத்திராபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் தண்டபாணி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ் கட்சி ஒன்றியச் செயலர் துரை.அருணன் ,திராவிட கழக நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    செந்துறையில் ஒன்றியச் செயலர் (வ) வீரவளவள், திருமானூரில் ஒன்றியச் செயலர் (கி) கண்ணன், ஜயங்கொண்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் பாரதி, முத்துகிருஷ்ணன், ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலாளர் (வ) தேவேந்திரன், தா.பழூரில் ஒன்றியச் செயலர் தங்கராசு ஆகியோர் தலைமையில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பொருப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



    Next Story
    ×