search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பரிசு பொருட்கள்
    X

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பரிசு பொருட்கள்

    • ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
    • செவிலியர் தினம் அரசு தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக செவிலியர் தினம் அரசு தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கும் நினைவு பரிசும், இனிப்பும் வழங்கப்பட்டது.மேலும் செவிலியர்கள் நோயாளிகளின் வழியையும் வேதனையும் புரிந்து கொண்டு மிக சிறப்பாக செயல்படுவதாகவும், மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்து பாராட்டினர்.

    இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தலைவர் கலைச்செல்வன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் தாமரைச்செல்வன், பி.ஆர்.ஓ.குமாரசாமி, துணைத் தலைவர் லோகநாதன் மற்றும் முன்னாள் தலைவர்கள், கார்த்திகேயன், ராஜேந்திரன், பொறியாளர்கள் ஹரிஹரன், வில்வநாதன், அன்னை தெரசா கல்வி குழுமத்தின் தாளாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் அரசு மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×