என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூக்கடை வியாபாரி தற்கொலை
    X

    பூக்கடை வியாபாரி தற்கொலை

    • பூக்கடை வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42) இவர் உடையார்பாளையம் பஸ்ஸ்டாப் அருகே பூக்கடை நடத்தி வந்தார். கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் நேற்றுமுன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    Next Story
    ×