என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுண்ணாம்பு கல் சுரங்க விரிவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தக் கூடாது - அரியலூர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
    X

    சுண்ணாம்பு கல் சுரங்க விரிவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தக் கூடாது - அரியலூர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

    • திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • எங்களது வாழ்வாதரமாக உள்ள குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க உள்ளோம் என அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    அரியலூர்

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் புதுப்பா ளையம், பெரியநாகலூர், அஸ்தினாபுரம், வாலாஜ நகரம், தாமரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது-

    அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப்பட வில்லை.

    இதுகுறித்து நீதிமன்றத் தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாங்கள் கொடுத்துள்ள நிலத்தில் வருகிற 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமென்ட் ஆலை நடத்தவுள்ளது.

    இந்தக் கூட்டம் மேற்கண்ட கிராமங்களில் நடத்தாமல் சம்மந்தமே இல்லாத இடத்தில் நடத்தப்படுகிறது.

    எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    மேலும் எங்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது. மீறி நடத்த முடிவெடுத்தால், உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எங்களது வாழ்வாதரமாக உள்ள குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க உள்ளோம் என அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    Next Story
    ×