search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி விஷம் குடித்து தற்கொலை
    X

    விவசாயி விஷம் குடித்து தற்கொலை

    • வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    உடையார்பாளையம்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி காலனி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் குமார்(42)விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.அதை பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் வலி தீரவில்லை. இதனால் மனமுடைந்த குமார் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×