என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து விவசாயி தற்கொலை
    X

    விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் இடயத்தாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 40), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கொளஞ்சிநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    Next Story
    ×