என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடம் அருகே மாணவர்களுக்கான கண்காட்சி போட்டி
- ஆண்டிமடம் அருகே மாணவர்களுக்கான கண்காட்சி போட்டி நடைபெற்றது
- வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் விழாவினை துவக்கி வைத்து அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பட்டணங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கண்காட்சி போட்டி நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் விழாவினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். கண்காட்சியில் மனித உறுப்பு மண்டலம், ஊசித் துளை கேமரா, செயற்கை சூழ்நிலை மண்டலம், எரிமலை சூரிய கிரகணம், பலூன் லிப்ட், இதயதுடிப்பு மானி, பாட்டில் நீர் வீழ்ச்சி, அமில கார சோதனை போன்ற பல்வேறு படைப்புகள் மாணவர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு செய்முறை குறித்து விளக்கி கூறினர்.
முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணகி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவி, துணைத் தலைவி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர். முடிவில் ஆசிரியர் சவிதா ரோஸி நன்றி கூறினார்.






