என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து முதியவர் தற்கொலை
    X

    விஷம் குடித்து முதியவர் தற்கொலை

    • விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 70). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாத நோய் ஏற்பட்டு ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அய்யாசாமி வயலுக்கு அடிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அய்யாசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



    Next Story
    ×