என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை
- விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட செங்கராயன்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 70). இவர் புற்றுநோயால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் நாள்தோறும் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த மருதமுத்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருதமுத்து நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






