என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் அன்னதானம்
    X

    சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் அன்னதானம்

    • திருமானூரில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் அன்னதானம் நடைபெற்றது
    • திரௌபதை அம்மன் திருவிழாவை முன்னிட்டு 14வது ஆண்டாக நடைபெற்றது

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பாக 14-ம் ஆண்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, தொடர்ந்து 65 நாட்கள் நீர் மோர் வழங்கப்பட்டது. இதன் நிறைவாக திருமானூர் திரெளபதை அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டும் இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சமூக ஆர்வலர் பாளை திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இயக்க தலைவர் மு.வரதராஜன் வரவேற்றார். அன்னதானம் வழங்கும் நிகழ்வை எ.கெ.எம். ஐ.ஏ.எஸ் அகாடமி தலைவர் கணேசன் மற்றும் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நா.பாஸ்கர், குரு.பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×