search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. மாணவரணி சார்பில் கட்டுரை , பேச்சுப் போட்டிகள்
    X

    தி.மு.க. மாணவரணி சார்பில் கட்டுரை , பேச்சுப் போட்டிகள்

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. மாணவரணி சார்பில் கட்டுரை , பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடந்தது. போட்டியினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    மேலும் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டத்திட்ட திருத்தக் குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன், நேஷனல் கல்லூரி தாளாளர் சிலம்புச்செல்வன், நகர செயலாளர் வெ கொ. கருணாநிதி,மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.ராமராஜன் மற்றும் பல்வேறு கல்லூரி மற்றும் அரசு பள்ளியில் இருந்து மாணவி மாணவிகள் திரளாக வளர கலந்து கொண்டனர்.

    Next Story
    ×