search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்
    • நோயாளிகளுக்கு உயர்தரமான சிறப்பான சிகிச்சையினை தொடர்ந்து வழங்க சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை–களின் சார்பில் மேற்கொள் ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண–சரஸ்வதி முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித்துறை அரசு கூடுதல் தலை–மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வை–யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஜெயங் கொண்டம், மேலக்குடி–யிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜெயங் கொண்டம் தெற்கு மற்றும் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்தும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்து, சரியான நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பள்ளி குழந்தைக–ளுக்கு தொடர்ந்து சரியான நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்க–ளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஜெயங் கொண்டம் ஆதிதிரா–விடர் நல மாணவி–யர் விடுதியினை பார்வையிட்டு, விடுதியின் அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்தார். மேலும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையினை பார்வையிட்டு, மருத்துவ–மனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். சிகிச்சை பெற வருகை தந்த நோயாளிகளிடமும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளுக்கு உயர்தரமான சிறப்பான சிகிச்சையினை தொடர்ந்து வழங்கவும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அறிவு–றுத்தினார். மேலும், ஆண்டி–மடம் ஊராட்சி ஒன்றியம், விளந்தை அரசினர் பெண் கள் உயர்நிலைப் பள்ளி–யில் ரூ.6.77 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணி–களை பார்வையிட்டு, கட்டுமான பொருட்களின் தரம், பணிகள் ஆரம்பித்த நாள், பணி முடிவடையும் நாள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்ட–றிந்து ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை தரமான முறையில் விரை–வாக கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்க–ளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஆண்டிம–டம் வட்டாட்சியர் அலுவல–கத்தினை பார்வையிட்டு, அலுவலகத்தில் பராமக்கக்கப்பட்டு வரும் பதிவே–டுகள் குறித்தும், ஆன்லைன் பட்டா மாறுதல் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் களை தொடர்ந்து விரை–வாக வழங்கவும் அலுவலர்க–ளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவல–கத்தினை பார்வையிட்டு, பணிகள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பிற பணிகள் குறித்து கேட்ட–றிந்து ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கான அத்தி–யாவசிய பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றவும் அலுவ–லர்களுக்கு அறிவுறுத்தி–னார். மேலும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தா–மணி ஊராட்சி மன்ற அலுவ–லகத்தினை பார்வையிட்டு, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, கீழ சிந்தாமணி நடுத்தெருவில் ரூ.9.29 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கால் வாய் அமைத்தல் பணியை–யும், மேல சிந்தாமணி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பயனா–ளிகளையும் பார்வை–யிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசின் திட்டப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சம்மந்தப்பட்ட அலுவ–லர்களுக்கு அறிவுறுத்தினார்.


    Next Story
    ×