search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை இனத்தவர்கள் சுயதொழில் தொடங்க கடன் பெற அழைப்பு
    X

    பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை இனத்தவர்கள் சுயதொழில் தொடங்க கடன் பெற அழைப்பு

    • பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை இனத்தவர்கள் சுயதொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்
    • கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின இனத்தவர் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தொழில் கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழு சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி, உயர் கல்வி கடன் பெற விரும்புவர்கள், வரும் 6-ம் தேதி திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 13-ந் தேதி செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 20-ந் தேதி உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 27-ந் தேதி தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள கடன் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×