என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை கண்டித்து அரியலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
- மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார்.
அரியலூர் :
மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். அமைப்புச்சார தொழிலாளர்கள் பிரிவு மாநிலச் செயலர் மாரியப்பன்குமார், அரியலூர் மாவட்ட மேற்பார்வையாளர் சி.சந்திரசேகரன், மாநில பொறுப்பாளர் இல.கண்ணன், நகர தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Next Story






