search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி

    • விழிப்புணர்வு பேரணி நடந்தது
    • உலக காசநோய் தினத்தை முன்னிட்டு

    அரியலூர்:

    உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, அரியலூரில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி மார்க்கெட் தெரு, எம்.பி.கோயில் தெரு, திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, ஒற்றுமைத்திடல் முன்பு நிறைவடைந்தது.

    பேரணியில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அ.முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியர் மு.ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×