என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர் பலி
- லாரி மோதி ஆட்டோ டிரைவர் பல
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சூர்யா(25).ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று இரவு காட்டுமன்னார்கோவிலில் உள்ள மாமியார் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை கச்சிபெருமாள் கிராமத்தை சூர்யா டூவீலரில் கடந்த போது எதிரே வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது. இதில் சூர்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் எஸ் ஐ திருவேங்கடம் இறந்த சூரிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் இறந்து போன சூரியாவுக்கு ராஜலட்சுமி(24) என்ற மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






