search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
    X

    பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

    • பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • இருகுடும்பத்தினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி பெரிய தெருவை சேர்ந்தவர் மாயவன். இவருடைய மனைவி கண்ணகி (வயது 42). அதே தெருவை சேர்ந்தவர் தர்மதுரை. இவருடைய மனைவி ஜோதி (48). இந்தநிலையில் கண்ணகி மகள் அனிதாவை, ஜோதியின் மகன் திருமணம் செய்து கொண்டதால் இருகுடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    நேற்று முன்தினம் கண்ணகியை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோதி கீழே கிடந்த கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து ஜோதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×