என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
- அரியலூர் மாவட்டத்தில் எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும்
- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
- எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும்
அரியலூர், அரியலூர் மாவட்டத்தில் எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் இல்லை என்ற நிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தெரிவித்துள்ார்.
6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் இணைப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் ஆசிரியர்களுக்காக அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியிடைப் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் தெரிவித்த தாவது:-
மெல்ல கற்கும் மாணவர்களை
தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய படங்களில் அடி ப்படை திறன்களை அடை யச் செய்து அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மாவட்டத்தில்
உள்ள அனைத்து பள்ளிகளிலும் எந்த குழந்தைக்கும் எழுதுவதிலும், வாசிப்பதிலும் இடையூறு இருக்கக் கூடாது. எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் அரியலூர் மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
பயிற்சியில், கீழப்பழூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, முதுநிலை விரிவுரை யாளர் மனமளர்ச்செல்வி, இடையக்குறிச்சி தலைமை ஆசிரியை வேல்ஒளி, சிறு வளூர் அரசு உயர்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, பள்ளி துணை
ஆய்வாளர்கள் பழனி ச்சாமி, செல்வகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்