என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்கள் இந்திய கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வு
- ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்கள் இந்திய கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வு செய்யபட்டுள்ளனர்
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் கண்ணன், சின்னப்பா ஆகியோர் மாணவர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி ஊக்கப்படுத்தினர்.
ஜெயங்கொண்டம்,
தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டிக்கான தேர்வு போட்டியும், சாம்பியன்ஷிப் போட்டியும் செங்கல்பட்டு மாவட்டம் மேல கோட்டையூர் தமிழக அரசு விளையாட்டுக் கல்லூரியில் உள்ள இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் மாணவர்கள், கிக் பாக்ஸிங் தலைவர் சென்சாய் ரங்கநாதன், மாவட்ட செயலாளர் சத்யராஜ் ஆகியோர் தலைமையில் ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்கள் ரிஷிகா, மகாலட்சுமி, ரித்திகா, அஷ்யா, முகுந்தன், ராஜ்கிரன், ரேவன் பெட்ரிக் ஆகியோர் ஆகஸ்ட் மாதம் ராஞ்சியில் நடைபெறும் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் கண்ணன், சின்னப்பா ஆகியோர் மாணவர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி ஊக்கப்படுத்தினர். மேலும் அகில இந்திய போட்டிக்கு செல்லும் போக்குவரத்து செலவை அமைச்சர் வழங்குவதாக கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.இந்நிகழ்வில் ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரங்கமுருகன், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அவிலாதெரசாள், ஆசிரியர்கள் கிருஷ்ண லீலா, பாலகுமாரன், அமைச்சூர் கிக் பாக்சிங் மாவட்டச் செயலாளர் சத்யராஜ், துணைத்தலைவர் நிர்மலா மேரி, தேசிய நடுவர் ரவிகுமார், ஆண்டிமடம் பயிற்சியாளர்கள் பிரிதிவிராஜ், செந்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






