என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • ஜெயங்கொண்டத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா கொடியசைத்து, பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பு, புதிய பேருந்து நிலையம்வரை பேரணி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சந்திரன்,பரம்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனரும் அன்னை தெரசா நிறுவனங்களின் தாளாளர் முத்துக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஜெகநாத், சாஹிரா பானு, சுமதி, காவல் உதவி ஆய்வாளர்கள் தன செல்வம், சுப்பிரமணி, உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சர்வதேச போதை எதிர்ப்பு நாள் உறுதிமொழி தினத்தை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர்முத்தையன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவிகள் மற்றும் தொட்டியம் கொசவம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், தொட்டியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பால சமுத்திரத்தில் இருந்து தொட்டியம் கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைப்பெற்றது. பின்பு சர்வதேச போதை எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதேபோல் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

    Next Story
    ×