search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதைகள் அதிக விலைக்கு விற்றால்  நடவடிக்கை
    X

    விதைகள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

    துணை இயக்குநர் எச்சரிக்கை

    அரியலூர்,

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விதைகளை அதிகபட்ச விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நீர் பாசன வசதி உள்ள இடங்களில், வரும் கோடைபருவத்தில் கம்பு, மக்காச் சோளம், பருத்தி, உளுந்து, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.தரமான விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்க செய்வதே விதை ஆய்வு துறையின் முக்கியநோக்கமாகும்.விவசாயிகள் சான்று பெற்ற தரமான விதைகளை விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். சான்று பெற்ற விதை களைபயன்படுத்தினால் தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படும், விதையின் அளவுகுறையும். சீரான வேகமான முளைப்பு திறன் உள்ள நாற்றுகள் கிடைக்கும். பூச்சிநோய் தாக்குதல் குறையும், 5 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும் போது அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்யவேண்டும்.

    விவ சாயிகள் விதைகளை வாங்கும் போது விற்பனைப் பட்டியல் கேட்டு பெறவேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் விற்பனையாளர்கள் மீது விதைச் சட்டம் , விதை விதிகள் , விதை கட்டுப்பாடுஆணையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×