search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் அனுமதி பெறாத விடுதிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை
    X

    அரியலூரில் அனுமதி பெறாத விடுதிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை

    • விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015படி தங்களது விடுதிகளை பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
    • பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621704, தொலைப்பேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களினால் நடத்தப்பட்டு வரும் 18 வயதிற்குட்பட்வர்களுக்கான தங்கும் இல்லங்கள் மற்றம் விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015படி தங்களது விடுதிகளை பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் இல்லங்கள் பதிவு செய்வதற்கு பதிவு கட்டணமாக ரூ.3000/- மாவட்ட கலெக்டர், அரியலூர் என்ற பெயரில் வரைவேலை எடுத்து வழங்கப்பட வேண்டும் எனவும்,

    பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621704, தொலைப்பேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

    பதிவு பெறாமல்நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இத் தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர்ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×