

அரியலூர்,
அரியலூர் நகராட்சியில் ரூ.1.18 கோடியில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. திறப்பு விழா காண்பதற்கு முன்பே மதுபான பிரியர்களின் டாஸ்மாக் பாராக செயல்பட தொடங்கிவிட்டது. மாவட்ட, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.