என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சீட்டு விளையாடிய 6 பேர் கைது
- பணம் வைத்து சீட்டு விளையாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம், தா பழூர், உடையார்பாளையம், மீன்சுருட்டி உட்பட்ட கிராமங்களில் முந்திரி தோப்பு உட்பட பல்வேறு இடங்களில் பணம் வைத்து சீட்டு சூதாட்டம் நடப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்ேபாது ஜெயங்கொண்டம் காந்திநகர் மாரியம்மன் கோயில் பகுதியில் பணம் வைத்து சீட்டு சூதாடிய சிலர், போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். அவர்களை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் காந்திநகரை சேர்ந்த பாலசுப்பிரமணி யன் (வயது 25), வேல்முருகன் (28), அம்பேத்கர்நகர் அயப்பன் (31), பாஸ்கர் (44), வடக்கு தெருவை சேர்ந்த கலையரசன் (35), சண்முகம் (31) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, சீட்டு கட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






