என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது
- அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
அரியலூர்
பெரம்பலூர் மாவட்டம், விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி(வயது 36). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியலூரில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சில் அவர் பணியில் இருந்தார். அரியலூரில் இருந்து அந்த பஸ் புறப்பட்டபோது 7 பேர் ஏறி, அந்த பஸ்சில் ஏறி கீழப்பழுவூருக்கு டிக்கெட் பெற்றனர். பின்னர் கீழப்பழுவூர் பஸ் நிலையம் வந்தவுடன் அவர்களை பஸ்சில் இருந்து இறங்குமாறு கண்டக்டர் பாரதி கூறியுள்ளார். அதில் 3 பேர் மட்டும் கீழே இறங்கியநிலையில், மற்ற 4 பேரும் இறங்க மறுத்து பாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது சட்டையை பிடித்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இது குறித்து அவர் கீழப்பழுவூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நெய்வேலியை சேர்ந்த மணியின் மகன் அசோக்(30), சக்கரவர்த்தியின் மகன் பழனி(41), ராஜேந்திரனின் மகன் சதீஷ்(32) ஆகியோரை போலீசார் கைது செய்து, அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்