என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது
- மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார், ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்குடியிருப்பு மற்றும் சீனிவாசன் நகர் பகுதிகளில் மது விற்பனை செய்தவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கீழக்குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் (வயது 39), சீனிவாசா நகரை சேர்ந்த கோபி (38) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






