search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் பகுதி சபா கூட்டம்
    X

    சிவகிரியில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் பகுதி சபா கூட்டம்

    • பகுதி சபா கூட்டத்திற்கு அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை தாங்கினர்.
    • ஒவ்வொரு வார்டுகளிலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் உள்ள 18 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிவகிரி பேரூராட்சியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் பற்றிய விபரங்கள், மேற்படி திட்டங்களால் பயனடைந்த பகுதிகள் மற்றும் மக்கள் பற்றிய விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    கூடுதலாக தண்ணீர் வசதி

    பகுதி சபா கூட்டத்திற்கு அந்தந்த வார்டுகளின் கவுன்சிலர்கள் தலைமை தாங்கினர். 5-வது வார்டு ஜீவா நகரில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு விக்னேஷ் ராஜா தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கட கோபு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், தலைமை எழுத்தர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர்கள் மற்றும் வரித்தண்டலர்கள் ஆகியோர் வார்டு குழு செயலாளர்களாக கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு வார்டுகளிலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது கூடுதலாக வார்டுகளில் தண்ணீர் வசதி செய்து தரவேண்டும். கழிப்பிட வசதி இல்லாத இடங்களில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். தெற்கு ரத வீதியில் கீரை கடை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பாலத்தினை உயர்த்தி புதுப்பித்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அதிவிரைவில் அந்தந்த பகுதிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    வாசுதேவநல்லூர்

    வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான பகுதி மக்கள் கலந்து கொண்டு திட்டப் பணிகளை பாராட்டியும், வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கூட்டத்தில் தெரிவித்தனர். புதுமந்தை முனியாண்டி கோவில் வளாகத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு பேரூராட்சிமன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பரமசிவன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மகாதேவன், வனக்குழு தலைவர் போஸ் ராஜா, பேரூராட்சி அலுவ லகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×