துளசியாப்பட்டினத்தில் மாணவர்களுக்கு வில்வித்தை பயிற்சி

நாகை மாவட்டத்தில் பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நடை பெற்றது.50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.
மாணவர்களுக்கு வில்வித்தை பயிற்சி நடந்தது.
மாணவர்களுக்கு வில்வித்தை பயிற்சி நடந்தது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நிறுவனர் முத்துக்குமரன் தலைமையில் நடந்தது.

இதில், வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.

நிகழ்ச்சியில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க தலைவர் அருள்ராஜ், பொதுச்செயலாளர் மதன்குமார் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட வில்வித்தை பயிற்சியாளர்கள் கார்த்தி மற்றும் வெற்றிவேல், நாகை மாவட்ட வில்வித்தை சங்க துணைத்தலைவர் குமரகுருபரன், பொரு ளாளர் ஸ்ரீராம், பயிற்சியாளர்கள் வீர ராகுல், லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com