என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அறப்பளீஸ்வரர்கோவில் ஆடிப் பெருக்கு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
- கொடியேற்று விழாவில் கொல்லிமலை, சேந்தமங்கலம், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சி பெரிய கோவிலூர் பகுதியில் புகழ் பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
கடையெழு வள்ளல்களில் ஒருவராகிய வல்வில் ஓரி மன்னரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிவ பெருமானுக்கும், கொடி கம்பத்திற்கும் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பின் உற்சவமூர்த்தி உட்பிரகாரத்தில் வலம் வருவதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து 5 நாட்கள் விழா நடக்கிறது. விழாவையொட்டி இன்று சாமிக்கு திருக்கல்யாணமும், சாமி திருவீதி உலாவும். அதனை தொடர்ந்து நாளை(புதன்கிழ்மை) ஆடிப்பெருக்கு நாளில் உற்வர் சோமஸ்கந்தர் பல்லக்கிலும், வீதி உலாவும், அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடக்கிறது.
முன்னதாக கொடியேற்று விழாவில் கொல்லிமலை, சேந்தமங்கலம், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இவ்விழாவில் வளப்பூர் நாடு பட்டக்காரர் பார்த்தீபன், உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்க மாநில தலைவர் வேலுசாமி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆடி பெருக்கு விழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்து வசதிகளை போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்