search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்களம் கிராமம் ஆரணி ஆற்றில் இருந்து மணல் கடத்த முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு
    X

    மங்களம் கிராமம் ஆரணி ஆற்றில் இருந்து மணல் கடத்த முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு

    • மோட்டார் சைக்கிளில் மணல் கடத்த முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.
    • விசாரணையில் அவர்கள் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். மங்களம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்த முயன்ற மூன்று பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    விசாரணையில் அவர்கள் மங்களம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்(வயது29), தேவன்(வயது30), சாந்தகுமார்(வயது28) என்பது தெரியவந்தது. குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×