என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இது என்ன தள்ளு மாடல் பேருந்தா? குமுறும் பயணிகள்
- பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
- அடிக்கடி பயணிகளை தள்ளச் சொல்லி டிரைவர்கள் பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்குகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணியில் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வசதிக்காக ஆவடியில் இருந்து ஆரணிக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக இப்பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேருந்துகள் குறித்த நேரத்தில் வருவதில்லை, இரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில பேருந்துகளின் செல்ப் மோட்டார் வேலை செய்யாததாலும், பேட்டரிகள் சரியில்லாததாலும் டிரைவர்கள் பஸ்சை குறித்த நேரத்தில் ஸ்டார்ட் செய்ய இயலவில்லை என கூறப்படுகிறது. அடிக்கடி பயணிகளை தள்ளச் சொல்லி டிரைவர்கள் பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்குகின்றனர்.
ஆரணி-ஆவடி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்ய மிகவும் சிரமமாக உள்ளது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு இப்படி தள்ளு மாடல் வண்டியை இயக்க வேண்டாம் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்