search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணி தவறவிட்ட பணத்தை அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
    X

    ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பயணி தவறவிட்ட பணத்தை அலுவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

    • கடந்த 19-ம் தேதி தனது ஆட்டோ அருகே சாலையில் கிடந்த பையினை எடுத்து பார்த்ததில் ரூ.62,500 பணம் இருந்தது ெதரியவந்தது.
    • இந்த நேர்மையை அறிந்து சீர்காழி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் சரவணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினர்.

    சீர்காழி:

    சீர்காழியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சர வணன். இவர் சீர்காழி ரயில் நிலையம் நிறுத்தத்தில் தனது ஆட்டோ சவாரிக்காக நிறுத்தி ஆட்டோ ஓட்டி வருகிறார். இதனிடையே கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு தனது ஆட்டோ அருகே சாலையில்கிடந்த பையினை எடுத்து பார்த்துள்ளார். அதில் ரூ.62,500 பணம் இருந்தது. உடனடியாக சற்றும் யோசிக்காமல் ஆட்டோ ஓட்டுனர்சரவணன் ரயில் நிலைய அலுவலர் மணிகண்டனிடம் ஒப்படை த்தார்.அதனை பெற்று க்கொண்ட நிலைய அலுவலர் உரிய ஆதாரங்களை தந்து பணத்தை தொலைத்தவர் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனரின் இந்த நேர்மையை அறிந்து சீர்காழி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் சரவணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினர். ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை சமூக வலைத ளங்களில் பகிர்ந்து சீர்காழி பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×