search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

    • கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு கடந்த 18.07.2022 முதல் 28.07.2022 வரை விண்ணப்பங்கள் பெற்றுகொள்ளலாம்.
    • 01.08.2022 அன்று குறைந்தபட்சம் 17வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வக்குமார் வெளியிட்ட செய்தி

    குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு கடந்த 18.07.2022 முதல் 28.07.2022 வரை விண்ணப்பங்கள் பெற்றுகொள்ளலாம். விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கல்வித் தகுதி 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் 10,+2 கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் தகுதி உடையவர் ஆவார்கள். 01.08.2022 அன்று குறைந்தபட்சம் 17வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    இப்பயிற்சிக்கான விண்ணப்பத்தினை நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலை யத்திற்கு நேரில் வந்து ரூ.100/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேற்படி மேலாண்மை நிலையம், 796- சேலம் பிரதான சாலை (மயில்வாகனம் காம்ப்ளக்ஸ்) முருகன் கோயில் பேருந்துநிறுத்தம் அருகில், நாமக்கல் 637001 என்ற முகவரிக்கு கூரியர் அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்பலாம் என நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×