என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்து கொண்டனர்.

    திருவாரூர்:

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    பூந்தோட்டம் மருத்துவ அலுவலர் டாக்டர் விநாயகர்வேலன் தலைமை தாங்கினார். பல் மருத்துவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் உமாராணி, மருத்துவ துணைஇயக்குனரின் உதவியாளர் கணேசன், சித்தா டாக்டர் சரண்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×