என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாசுதேவநல்லூர் தங்கப்பழம் சட்டக் கல்லூரியில் கேலி வதைத் தடுப்பு வாரம் அனுசரிப்பு
- மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
- போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி கேலிவதை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரியில் கடந்த 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கேலி வதைத் தடுப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. நிறைவாக கேலி வதைத் தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சட்டக் கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி வரவேற்றார். தலைமை விருந்தினராக தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் வினுதா கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி கேலிவதை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தங்கப்பழம் சட்டக் கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி ஆகியோர் செய்தனர். இதில் மாணவ- மாணவிகள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டர். முன்னதாக மாணவி பவித்ரா சண்முகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி ரக்ஷனா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்