என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூர் கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முன்னதாக திருச்செந்தூரை குப்பையில்லா நகராட்சியாக மாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி ஆணையர் கண்மணி ஆலோசனையின்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரமேஷ், உறுப்பினர்கள் ஆனந்த ராமச்சந்திரன், சுதாகர், கிருஷ்ணவேணி செண்பகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துளசி பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்டப்பணியாளர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவில் கடற்கரை பகுதியில் உள்ள நெகிழிகள், கடல் கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக திருச்செந்தூரை குப்பையில்லா நகராட்சியாக மாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலர் வாள் சுடலை, துணைச்செயலர் மகராசன், செண்பகராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×