search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
    X

    அன்னதான நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.


    கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

    • ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 17-வது மாத அன்னதான நிகழ்ச்சி கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் உள்ள காளியம்மன் கோவிலில் நடைபெற்றது.
    • கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன், குழந்தை பேரு மருத்துவ நிபுணர் பூவேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் உலக மக்கள் நன்மை வேண்டியும், தைமாத கடைசி ஞாயிற்றுக்கிழ மையை முன்னிட்டும், ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 17-வது மாத அன்னதான நிகழ்ச்சி கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் உள்ள காளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தொழிலதி பரும், கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவரும், நகராட்சி உறுப்பினருமான முத்துராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி உறுப்பினர் மாரிமுத்து வரவேற்று பேசினார். நகர்மன்ற உறுப்பினர் மாரியம்மாள் சுரேஷ், தொழிலதிபர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், குழந்தை பேரு மருத்துவ நிபுணர் பூவேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதில் கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் ஸ்ரீ ராக வேந்திரா சேவா அறக்கட்ட ளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் லவராஜா, பாலமுருகன், மாரிமுத்து, சண்முகசுந்தரம், செல்வம், சுப்பிரமணியன், முத்து மாரியப்பன், பொன் பாண்டியன், நடராஜன், மிலிட்டரி சந்திரன், குமார், சுரேஷ், தொழிலதிபர் தனபால், தங்கராஜ், காளிராஜ் மற்றும் முருகன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×