search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவுர்ணமி பூஜையையொட்டி சுருளி அருவி ஆதி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம்
    X

    ஆதிஅண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    பவுர்ணமி பூஜையையொட்டி சுருளி அருவி ஆதி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம்

    • ஆதி அண்ணாமலையார் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி சிவபெரு மானுக்கு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
    • அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் அருகே சுருளி அருவி பகுதியில் ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளது, இந்த கோவிலில் பவுர்ணமியை ஒட்டி நேற்று சிவபெரு மானுக்கு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக மூலவருக்கு தண்ணீர், பசும்பால், இளநீர், அருகம்புல் சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றது. பின்னர் சிவபெருமான், நந்தி சிலை மீது சாதத்தை பக்தர்கள் அன்னாபிஷேகம் செய்தனர்.அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் சுருளி அருகில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

    இதை அடுத்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சியில் கூடலூர், கம்பம், உத்தம பாளையம், சின்னமனூர், சுருளிப்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×