என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் காலி தட்டேந்தி ஆர்ப்பாட்டம்

    • தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பெரியபாளையம் ஆர்ப்பாட்டத்திற்கு ஹென்றி தலைமை தாங்கினார்.

    பெரியபாளையம்:

    தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சரின் ஆலோசனைப்படி சமூக நல இயக்குனர் பரிந்துரையின் பேரில் சட்டப்பூர்வமாக பென்ஷன் தொகை ரூ.7,850, அகவிலைப்படி 3 சதவீதம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் காலி தட்டேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, ஹென்றி தலைமை தாங்கினார். மணி, ஞானமூர்த்தி, துரைசாமி, நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் உஷாராணி, ஒன்றிய செயலாளர் தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில்,மாவட்ட தலைவர் சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முடிவில், ஜெயா நன்றி கூறினார்.

    Next Story
    ×