search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
    X

    ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

    • ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • வரும் 22 ஆம் தேதி பச்சை மயில் வாகனத்தில் முருகப் பெருமான் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அவ்வகையில், இன்று காலை ஆறு மணி முதல் 7:30 மணிக்குள் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகனின் அருள் வேண்டி அரோகரா கோஷமிட்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும் 22 ஆம் தேதி காலை முதல் மாலை வரை பச்சை மயில் வாகனத்தில் முருகப் பெருமான் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் முருகப்பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    Next Story
    ×