search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா
    X

    ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

    • பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
    • ஒவ்வொறு வருடமும் சித்திரை மாத பவுர்ணமியன்று இக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொறு வருடமும் சித்திரை மாத பவுர்ணமியன்று இக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல், நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு முத்து மாகாளியம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.

    விழாவில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்குகளை கொண்டு சென்று மாவிளக்கு பூஜையும் செய்தனர். அதனைத் தொடர்ந்து வானவேடிக்கை நடைபெற்றது.

    நள்ளிரவு 12 மணியளவில், முத்து மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் திருவீதி உலா வந்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள், அம்மனுக்கு தேங்காய் உடைத்து, பழம் வைத்து வழிபட்டனர்.

    Next Story
    ×