என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மிதந்த முதியவர் சடலம்
- காய்கறி வியாபாரம் செய்து வரும் முதியவர் கடை தெருவிற்கு சென்றுள்ளார்.
- பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மேல அக்ராஹாரம் தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 60).
இவர் சைக்கிளில் காய்கறிகளை வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தவுடன் கடை தெருவிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆற்றில் சடலமாக முகமது யூசுப் கிடந்துள்ளார்.
உடன் அக்கம் பக்கத்தினர் நன்னிலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முகமது யூசுப் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story






