என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அழகாபுரத்தில் பிச்சை எடுத்தவரை கொன்று உடல் வீச்சு முதியவர் கைது
- 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.
- போலீசார் தீவிர விசாரணையில் கொலை செய்தவர் அந்த பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 65) என்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் அழகாபுரம் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து அழகாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள், அந்த முதியவர் உடலை பரிசோதிக்கையில், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தினர். இவர் அந்த பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார், கொைல வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடம் அருகில் சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர். மேலும் கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
போலீசார் தீவிர விசாரணையில் கொலை செய்தவர் அந்த பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 65) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொலையுண்ட முதியவர் பெயர்? மற்றும் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. எனவே அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் ெபாதுமக்கள் உடனடியாக ேபாலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு அழகாபுரம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






