search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளுக்கு இடையேயான கோகோ போட்டி
    X

    பள்ளிகளுக்கு இடையேயான கோகோ போட்டி

    • அரியலூரில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கோகோ போட்டி
    • போட்டிகளில் 15 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில், குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் ஆக.2 ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில், அரியலூர் குறுவட்டத்துக்கான கோகோ போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியினை மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடக்கி வைத்தார். இதில் 14,17,19 வயது என 3 பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் 15 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    போட்டிகளுக்கு நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், இளவரசன், செல்வம், தினேஷ்குமார், கலையரசி, ஜோஸ்பின் மேரி உள்ளிட்டோர் பணியாற்றினர்.

    Next Story
    ×