என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தீ தடுப்பு சாதனங்கள் விற்பனை கடையில் திருடிய ஊழியர் கைது
Byமாலை மலர்1 Feb 2023 9:09 AM GMT
- சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியில் தீ தடுப்பு சாதனங்கள் விற்பனை கடையில் திருட்டு.
- சம்பவத்தன்று இவரது கடை லாக்கரில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு (வயது 27). இவர் அதே பகுதியில் தீ தடுப்பு சாதனங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது கடை லாக்கரில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பாலு, பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அதே கடையில் வேலை பார்க்கும் கருப்பூர் வெள்ளாளப்பட்டி அருகே உள்ள வேலவன் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் (வயது 21) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஹரி விக்னேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X