என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுடன் தஞ்சம் அடைந்த நிதி நிறுவன ஊழியர்
    X

    ஆனைமலை போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுடன் தஞ்சம் அடைந்த நிதி நிறுவன ஊழியர்

    • காதலா்கள் இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
    • போலீசார் 2 பேருடைய பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 19). நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பள்ளியில் படித்த போது செங்குட்டைபாளையத்தை சேர்ந்த ரம்யா (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் ரம்யாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோர் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடி வந்தனர். இது குறித்து ரம்யா தனது காதலனிடம் தெரிவித்தார்.

    எனவே பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதல் ஜோடி வீட்ைட விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 பேரும் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஆனைமலையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனை தொடர்ந்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆனைமலை போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேருடைய பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×