search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி
    X

    தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி

    • முத்தையாபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி நகரில் சக்தி விநாயகர் ஆலயம் உள்ளது.
    • உண்டியல் பூட்டை மர்மநபர் ஒருவர் கடப்பாறையால் உடைத்து திறக்க முயன்றுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி நகரில் சக்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அய்யப்பன் விக்ரஹம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்ற நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்துள்ளார். அவர் உண்டியல் பூட்டை கடப்பாறையால் உடைத்து திறக்க முயன்றுள்ளார்.

    ஆனால் அவரால் உடைக்க முடியவில்லை. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் கோவிலுக்கு வரவே, அங்கிருந்து மர்மநபர் தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×