என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கர் படம் கிழிப்பு; 4 பேர் கைது
    X

    அம்பேத்கர் படம் கிழிப்பு; 4 பேர் கைது

    • அம்பேத்கர் படத்தை கிழித்ததுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், 2 கார் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.
    • ரமேஷ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சின்ன தாசரப்பள்ளி கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவையொட்டி பாடல் கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து அருகில் உள்ள அட்டூர் கிராமத்துக்குள் 200-க்கும் மேற்பட்டோர் புகுந்து அம்பேத்கர் படத்தை கிழித்ததுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், 2 கார் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.

    இதுதொடர்பாக அட்டூர் கிராமத்தை சேர்ந்த மோகன் (வயது 27) என்பவர் பாகலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பெரிய தாசரப்பள்ளியை சேர்ந்த மகேஷ் (20), வினோத் (24), கீர்த்தி (24) மற்றும் சின்ன தாசரப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் (25) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×