search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

    • 26 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வாங்கி கொடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே செம்பத னிருப்பு அல்லிவிளாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைப்பெற்றது.

    விழாவில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலனை கருதி சுகாதார கேடு இல்லாமல் அனைத்து மாணவர்களும் தண்ணீர் அருந்த வேண்டும் என்று நோக்கத்தோடு முன்னாள் மாணவ மாணவிகள் சார்பாக பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வாங்கி கொடுத்தனர்.

    விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ராஜீவ் காந்தி, பாலமுருகன், இளையராஜா, அருள், ராஜகுரு, வினோத், அமிர்தலிங்கம், உத்திராபதி, செல்வ சுந்தரி, கோமதி, விஜயலட்சுமி, சுமித்ரா, சுகுணா, மற்றும் சக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×